உள்ளூர் செய்திகள்
விதிமுறைகளை பின்பற்றாமல் எருது விடும் நிகழ்ச்சி:போலீசில் புகார்
- இந்த கிராமத்தில் எருது விடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
- கிராம நிர்வாக அதிகாரி ராயக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகேயுள்ளது பாலையூர். பொங்கல் விழாவை ஒட்டி இந்த கிராமத்தில் எருது விடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இந்நிலையில் பாலையூர் கிராம நிர்வாக அதிகாரி வெங்கடாசலம் என்பவர் ராயக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரில் எருது விடும் நிகழ்ச்சியில் அரசின் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
அதன்பேரில் நிகழ்ச்சியை நடத்திய பஞ்சாயத்து தலைவர் மூர்த்தி, திருப்பதி, முனியப்பன், நாகன் ஆகியோர் மீது ராயக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.