உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே முந்திரி பயறுடன் காரில் சென்ற வியாபாரியை வழிமறித்து தாக்கிய கும்பல்

Published On 2022-06-25 08:47 GMT   |   Update On 2022-06-25 08:47 GMT
  • பண்ருட்டி அருகே முந்திரி பயறுடன் காரில் சென்ற வியாபாரியை வழிமறித்து மர்ம கும்பல் தாக்கினார்கள்.
  • தடுக்க வந்த தவசியை தாக்கி காரையும், மோட்டார்சைக்கிளையும் ஓட்டி சென்றனர்.

கடலூர்:

பண்ருட்டி அருகே வீரசிங்கன்குப்பம் கிராமத்தைச்சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது உறவினர் தவசி. இவருக்கும் அதே பகுதியைசேர்ந்தசங்கர், சரத்குமார் என்பவருக்கும் முந்திரி பணம் கொடுக்கல்-வாங்கலில் முன்விரோதம் உள்ளது. சம்பவத்தன்று கிருஷ்ணகுமார், முத்துவேல்என்பவரிடம் 500 கிலோ முந்திரி பயறு எடைபோட்டு வாங்கிக் கொண்டு காரில்சென்று கொண்டிருந்தார். அப்போது சங்கர் வீட்டு முன்பு சென்று கொண்டிருந்த போது சங்கர், சரத்குமார், ஆனந்தகுமார்உள்ளிட்ட 6 பேர்காரை வழிமறித்து கிருஷ்ணகுமாரை உருட்டு கட்டையால் தாக்கினர். இதனை தடுக்க வந்த தவசியை தாக்கி காரையும், முந்திரி பயிரையும், தவசி ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளையும் ஓட்டி சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் முத்தாண்டிக்குப்பம் போலீஸ்சப்இன்ஸ்பெக்டர் ராஜாராமன்இதுகுறித்து வழக்குப்பதிவுசெய்து 6பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News