உள்ளூர் செய்திகள்

சாலையின் நடுவே உள்ள மின்கம்பம்.

சாலையின் நடுவே உள்ள மின்கம்பம் ஓரத்தில் நடப்படுமா?

Published On 2023-06-10 15:16 IST   |   Update On 2023-06-10 15:18:00 IST
  • இணைப்பு சாலையின் நடுவே மின்கம்பம் நடப்பட்டது.
  • இதனால் மாற்று வழியில் 5 கி.மீ சுற்றிச்செல்லும் அவல நிலை உள்ளது.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த விழுந்த மாவடி மணல்மேட்டில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கஜா புயலின் போது எல்லைரோட்டையும் -சடச்சி கச்சல் சாலையை இணைக்கும் 2 கிலோ மீட்டர் இணைப்பு சாலையின் நடுவே மின்கம்பம் நடப்பட்டது.

சாலையின் நடுவே இடையூறாக உள்ள இந்த மின்கம்பத்தால் பள்ளி வாகனங்கள், ஆம்புலன்ஸ், மற்ற வாகனங்கள் என அனைத்தும் மாற்றுவழியில் 5 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் அவல நிலை உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் சாலை பணியையும் மேற்கொள்ள முடியாமல் மணல் சாலையாக உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே உடனடியாக மின்கம்பத்தை அகற்றி சாலையின் ஓரத்தில் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News