உள்ளூர் செய்திகள்

போலீஸ் சோதனை சாவடி கட்டிடம் இடித்து அப்புறப்படுத்தப்படுமா?

Published On 2023-06-13 09:18 GMT   |   Update On 2023-06-13 09:18 GMT
  • பல ஆண்டுகளுக்கு முன்பு வங்கி எதிர்புறம் போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டது.
  • வங்கிக்கும், ரேசன் கடைக்கும் வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த தேத்தாக்குடி தெற்கு பகுதியில் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் ரேசன் கடை இயங்கி வருகிறது. வங்கிக்கும், ரேசன் கடைக்கும் 100-க்கும் மேற்பட்டவர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு வங்கி எதிர்புறம் போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டது.

ஆனால், தற்போது அந்த சோதனை சாவடி கட்டிடம் மிகவும் பாழடைந்த நிலையில் மூடப்பட்டு யாரும் பயன்படுத்த முடியாத வகையில் சமூக விரோதிகளின் கூடாரமாக காட்சியளிக்கிறது.

இதனால் அருகில் உள்ள வங்கிக்கும், ரேசன் கடைக்கும் வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

எனவே, பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக இந்த சோதனை சாவடி கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News