உள்ளூர் செய்திகள்

தஞ்சை ஆத்துபாலம் திவான் நகரில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின்கம்பங்கள்.

போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின்கம்பங்கள் மாற்றி நடப்படுமா?

Published On 2022-12-23 09:43 GMT   |   Update On 2022-12-23 09:43 GMT
  • இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் மின்கம்பங்கள் இருப்பது அருகில் வந்த பிறகு தான் தெரிகிறது.
  • இடையூறாக இருக்கும் 2 மின்கம்பங்களை வேறு இடத்தில் மாற்றி நட வேண்டும்.

தஞ்சாவூர்:

தஞ்சை ஆத்து பாலம் திவான் நகரில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த பகுதியில் எப்போதும் போக்குவரத்து இருந்து கொண்டிருக்கும். பரபரப்பாக இயங்க கூடிய இந்த நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

ஆனால் சாலையில் இருந்த அடுத்தடுத்த 2 மின்கம்பங்கள் அகற்ற ப்படாமல் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் இந்த சாலையில் திரும்பும்போது சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் சில நேரங்களில் இந்த மின்கம்பங்கள் இருப்பது அருகில் வந்த பிறகு தான் தெரிகிறது. இதனால் மின் கம்பங்கள் மீது வாகனம் மோதி விடுமோ என அச்சத்தில் உள்ளனர்.

எனவே போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் 2 மின்கம்பங்களை வேறு இடத்தில் மாற்றி நட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News