நன்னிலம் பஸ் நிலைய வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?
- 25-க்கும் மேற்பட்ட கடைகள், பயணிகள் அமர்வதற்கான இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- புதிதாக பலர் தங்களுக்கு வளாகத்தில் கடை வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
நன்னிலம்:
நன்னிலம் பேரூராட்சிக்கு சொந்தமான பேரறிஞர் அண்ணா பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு கட்டி முடிக்கப்பட்டு ஒரு ஆண்டுகளுக்கு மேலாகிறது. விரிவாக்கம் செய்யப்பட்ட பஸ் நிலைய வளாகத்தில், 25-க்கும் மேற்பட்ட கடைகள், பயணிகள் அமர்வதற்கான இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கடைகள் ஏற்கனவே வளாகத்தில் கடை வைத்திருப்பவர்கள் தங்களுக்கு முன்னுரிமை வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.புதிதாக பலர் தங்களுக்கு வளாகத்தில் கடை வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் பஸ் நிலைய வளாகம் பணிகள் முழுமையாக முடிவடைந்து இன்னும் திறக்கப்படாமல் உள்ளது வியாபாரிகளுக்கு வேதனை ஏற்படுத்தி உள்ளது. வாழ்வாதாரத்திற்கான வருமானமின்றி சிரமப்ப டுவதாக தெரிவித்து வருகி ன்றனர். எனவே உடனடியாக பஸ் நிலையத்தை விரைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.