உள்ளூர் செய்திகள்

நன்னிலம் பகுதியில் விவசாய கல்லூரி அமைக்கப்படுமா?

Published On 2022-07-08 09:25 GMT   |   Update On 2022-07-08 09:25 GMT
  • மக்கள் எளிதில் அறிந்துகொள்ள கூடிய வகையில் நன்னிலம் பகுதியில் வேளாண் கல்லூரி கொண்டுவருதல் அவசியம்.
  • புதிய உத்திகளை தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ள நவீன வேளாண் அறிவியல் கல்வி என்பது மிக அவசியமாக தேவைப்படுகிறது.

நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகா, விவசாயம் சார்ந்த மக்கள் நிறைந்த பகுதியாகும்.

இப்பகுதி முழுமையாக விவசாய பின்னணியையும் விவசாயக் கூலித் தொழிலாளர்களைக் கொண்ட பகுதிகளில் இருந்து வருகிறது. இப்பகுதியில் கலை, அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது.

தற்போது உள்ள நவீன வேளாண் தொழில்நுட்பத்தை, இப்பகுதி மக்கள் எளிதில் அறிந்துகொள்ள கற்றுக்கொள்ள கூடிய வகையில், வேளாண் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக, நன்னிலம் பகுதியில் வேளாண் கல்லூரி கொண்டுவருதல் அவசியம் என நன்னிலம் பகுதி மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். விவசாயம் என்பது தற்போதைய காலகட்டத்தில், காலநிலை மாற்றத்தின் காரணமாக, இயற்கை சீற்றத்தால் பாதிப்படைந்து வரும் நிலையில், புதிய உத்திகளை தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ள, நவீன வேளாண் அறிவியல் கல்வி என்பது மிக அவசியமாக தேவைப்படுகிறது.

பல்வேறு கோவிலில் உள்ள நிலங்கள் விவசாயம் சார்ந்த நிலங்கள் உள்ள காரணத்தினாலும், விளைநிலங்களை கொண்டு புதிய வகையான பயிர் வகைகளை கண்டறியவும் விதை உற்பத்தியை மேம்படுத்தவும் அரசின் வருமானத்தை பெருக்கும் வகையில் வேளாண் துறை அறநிலையத்துறை இணைந்து நன்னிலம் பகுதியில் ஏழை எளிய விவசாய மக்கள் பிள்ளைகள், வேளாண்மை அறிவைப் பெற்று கொள்ள, விவசாய கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

Tags:    

Similar News