உள்ளூர் செய்திகள்

அறுவடை பணிகள் நடந்த காட்சி.

கல்லிடைக்குறிச்சியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படுமா?

Published On 2022-08-29 10:27 GMT   |   Update On 2022-08-29 10:27 GMT
  • சுமார் 2000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ள நெல் அறுவடை நடக்கிறது.
  • இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

கல்லிடைக்குறிச்சி:

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள ஜமீன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், அயன் சிங்கம்பட்டி, தெற்கு பாப்பான்குளம் உள்ளிட்ட பகுதியில் நெல்அறுவடை பணிகள் தொடங்கி உள்ளது.

சுமார் 2000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆனால் இந்த ஆண்டு இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்காததால் அறுவடை செய்யும் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதியடைகின்றனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு வியாபாரிகள் மிக குறைந்த விலைக்கு நெல்லை கொள்முதல் செய்கின்றனர்.

இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இதனால் பெரும்பாலான விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை வயல் வெளியில் கொட்டி வைத்துள்ளனர்.

Tags:    

Similar News