உள்ளூர் செய்திகள்

தியாகதுருகம் அருகேமனைவி மாயம்: கணவன் புகார்

Published On 2023-04-01 10:01 GMT   |   Update On 2023-04-01 10:01 GMT
  • தியாகதுருகம் அருகே புதுஉச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 43). ஆசாரி வேலை பார்த்து வருகிறார்.
  • சம்பவத்தன்று கடைக்குச் சென்ற பேபி ஷாலினி மீண்டும் வீடு திரும்பவில்லை.

கள்ளக்குறிச்சி:

தியாகதுருகம் அருகே புதுஉச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 43). ஆசாரி வேலை பார்த்து வருகிறார். இவர் கூத்தக்குடி மெயின் ரோடு பஸ் நிறுத்தம் அருகே மளிகை கடை வைத்துள்ளார். இந்த மளிகை கடையை இவரது மனைவி பேபி ஷாலினி (41) நடத்தி வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று கடைக்குச் சென்ற பேபி ஷாலினி மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கணேசன் கொடுத்த புகாரின் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பேபி ஷாலினியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News