உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே குடும்ப தகராறில் மனைவி மாயம்: கணவர் போலீசில் புகார்

Published On 2023-10-28 07:11 GMT   |   Update On 2023-10-28 07:11 GMT
  • கோவிந்தன் .இவரது மனைவி மகேஸ்வரி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
  • கடந்த மாதம் (செப்டம்பர்) 30-ந் தேதி முதல் மகேஸ்வரியை காணவில்லை.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட் டம் சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டை சேர்ந்தவர் சிங்காரவேல். இவரது மகன் கோவிந்தன் (வயது 29) லாரி டிரைவர். இவரது மனைவி மகேஸ்வரி (25). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பிரதாப் (3) என்ற மகன் உள்ளார். கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு இருந்த நிலையில், கடந்த மாதம் (செப்டம்பர்) 30-ந் தேதி முதல் மகேஸ்வரியை காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து கோவிந்தன் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News