உள்ளூர் செய்திகள்

ராஜநாராயணன்

நெல்லை அருகே ஓட்டல் அதிபர் தற்கொலைக்கு காரணம் என்ன? - போலீசார் தீவிர விசாரணை

Published On 2022-11-17 09:14 GMT   |   Update On 2022-11-17 09:14 GMT
  • நெல்லை மாவட்டம் மூலக்கரைப் பட்டி அருகே உள்ள கூந்தன்குளம் பார்வதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜநாராயணன். இவர் நெல்லை சந்திப்பில் பிரபல வணிக வளாகம் மற்றும் ஓட்டல் நடத்தி வந்தார்.
  • இவர் நேற்று மூலக்கரைப்பட்டி பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் பிணமாக மிதந்து கொண்டிருந்தார்.

களக்காடு:

நெல்லை மாவட்டம் மூலக்கரைப் பட்டி அருகே உள்ள கூந்தன்குளம் பார்வதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜநாராயணன். இவர் நெல்லை சந்திப்பில் பிரபல வணிக வளாகம் மற்றும் ஓட்டல் நடத்தி வந்தார்.

இவர் நேற்று மூலக்கரைப்பட்டி பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் பிணமாக மிதந்து கொண்டிருந்தார். தகவல் அறிந்த நாங்குநேரி தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து ராஜநாராயணன் உடலை மீட்டனர். மூலக்கரைப்பட்டி போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திகனர். ராஜநாராயணனுக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது.

மகனுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் ராஜநாரா யணனுக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் அவர் இதய நோய் பாதிப்பால் நெல்லையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

நேற்று மதியம் சொந்த ஊரான கூந்தன்குளத்திற்கு சென்றுவிட்டு காரில் மீண்டும் நெல்லைக்கு அவர் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது மூலக்கரைப்பட்டி அருகே கார் பின்பக்க டயர் பஞ்சராகி உள்ளது. உடனே அவரது மகனை செல்போனில் அழைத்துள்ளார். அவர் சிறிது நேரத்தில் வந்து விடுவதாக கூறி உள்ளார்.ஆனால் அதற்கு ராஜ நாராயணன் கோபம் அடைந்துள்ளார்.

ஏற்கனவே குடும்ப பிரச்சினையில் இருந்து அவர், உடல்நிலை பாதிப்பாலும் அவதிப்பட்டு வந்ததால் இந்த தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News