உள்ளூர் செய்திகள்

கேரளாவுக்கு வேலைக்கு சென்ற விருத்தாசலம் வாலிபர் மாயம்

Published On 2022-08-18 07:37 GMT   |   Update On 2022-08-18 07:37 GMT
  • சந்திரபாபு கடந்த நவம்பர் மாதம் 5-ந் தேதி கேரளா மாநிலத்தில் உள்ள தலச்சேரி என்ற ஊருக்கு வேலைக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து சென்றுள்ளார்.
  • தன் கணவர் காணாமல் போய்விட்டதாக அவரது மனைவி தமிழ்ச்செல்வி விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கடலூர்:

விருத்தாசலம் அருகே மன்னம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபாபு(வயது40). இவர் கடந்த நவம்பர் மாதம் 5-ந் தேதி கேரளா மாநிலத்தில் உள்ள தலச்சேரி என்ற ஊருக்கு வேலைக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து சென்றுள்ளார். ஆனால் அதன்பின் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை, செல்போன் எண்ணும் அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது. பல இடங்களில் அவரை தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதனையடுத்து தன் கணவர் காணாமல் போய்விட்டதாக அவரது மனைவி தமிழ்ச்செல்வி விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்று கொண்ட விருத்தாசலம் போலீசார் காணாமல்போன சந்திரபாபுவை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News