உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கே.எம்.சரயு வழங்கிய போது எடுத்த படம்.

கிருஷ்ணகிரியில் ரூ.27.94 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

Published On 2023-07-18 14:06 IST   |   Update On 2023-07-18 14:06:00 IST
  • பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 269 மனுக்களை பொதுமக்கள் வழங்கினார்கள்.
  • மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.56 ஆயிரம் மத்தியிலான திறன் பேசிகள் வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி, ஜூலை.18-

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கே.எம்.சரயு தலைமையில் நேற்று நடந்தது. இதில் பொதுமக்களிடம் வீட்டுமனை பட்டா, விலையில்லா தையல் எந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவி தொகை, சாலை வசதி, மின் இணைப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 269 மனுக்களை வழங்கினார்கள்.

மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் அதன் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் தலா ரூ.14 ஆயிரம் வீதம் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.56 ஆயிரம் மத்தியிலான திறன் பேசிகளையும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் தொழில் விரிவாக்கம் மற்றும் புதிய தொழில் தொடங்க 17 பயனாளிகளுக்கு ரூ.27 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் நுண் நிறுவன கடன் உதவிகள் என மொத்தம் 21 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் பத்மலதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலர் வசந்தகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News