உள்ளூர் செய்திகள்

நடைபயணம் சென்றவர்களை படத்தில் காணலாம். 

சின்னசேலத்தில் 4 வழி சாலையாக மாற்ற கோரி நடைபயணம்

Published On 2022-10-11 08:38 GMT   |   Update On 2022-10-11 08:38 GMT
  • தேசிய நெடுஞ்சாலையில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நடைபயணம் நடைபெற்றது.
  • சில பெரிய அளவிலான விபத்துக்கள் மட்டுமே வெளியே தெரிய வருகிறது.

கள்ளக்குறிச்சி:

சின்னசேலம் அருகே உள்ள கொங்கு தனியார் மண்டபத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலையில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நடைபயணம் நடைபெற்றது. சேலத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையை முழுமையான4 வழி சாலையாக மாற்றக் கூறி நடை பயணம் சின்ன சேலத்தில் நடந்தது.  சேலம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் 37 கிலோமீட்டர் நீளம் உள்ள 9 இடங்களில் இரு வழிச்சாலையாக உள்ளது.

இந்த தேசிய நெடுஞ்சாலைகளில் வேகமாக செல்லும் கனரக இலகு ரக மற்றும் இருசக்கர வாகனங்கள் நான்கு வழி சாலைகளில் பயணித்துவிட்டு திடீரென அகலம் குறுகிய இருவழி சாலைக்கு மாறும் பொழுது வாகனங்கள் அதிக அளவில் விபத்துகளில் சிக்குகிறது. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.அவற்றில் ஒரு சில பெரிய அளவிலான விபத்துக்கள் மட்டுமே வெளியே தெரிய வருகிறது. மேலும் பல சிறு விபத்துகள் வெளியே தெரிவதில்லை எனவே தமிழக அரசும் ஒன்றிய அரசும் போர்க்கால அடிப்படையில் இந்த சாலையை முழுவதுமாக நான்கு வழி சாலையாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கையை முன்னிறுத்தி நடை பயணம் நடைபெற்றது.

Tags:    

Similar News