வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
- வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல் தொடர்பான விழிப்புணர்வு பேரணி.
- துண்டு பிரசுரங்களை மாணவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் சி.க.சு. அரசு மேல்நிலைப்பள்ளியில் வரைவு வாக்காளர் பட்டியலில் புதிதாக வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல் தொடர்பான அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
பேரணியை வேதார ண்யம் வருவாய் கோட்டா ட்சியர் ஜெயராஜ் பவுலின் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், வேதாரண்யம் வருவாய் வட்டாட்சியர் ரவிச்சந்திரன், தேர்தல் துணை வட்டாட்சியர் ராஜா, வருவாய் ஆய்வாளர் மாதவன், கிராம நிர்வாக அலுவலர் உத்ராபதி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் நாகராஜன், அன்பழகன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கிய சைக்கிள் பேரணி சேது ராஸ்தா, மேலவீதி, வடக்கு வீதி, கீழவீதி தெற்கு வீதிவழியாக சென்று பள்ளியை வந்தடைந்தது.
வழிநெடுகிழும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, துண்டு பிரசுரங்களை மாணவர்கள் பொது மக்களுக்கு வழங்கினர்.