உள்ளூர் செய்திகள்
அகில இந்திய பாட்மிண்டன் போட்டியில் விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி மாணவி சாதனை
- தெலுங்கானாவில் அகில இந்திய சப்-ஜுனியர் பாட்மிண்டன் போட்டி நடைபெற்றது.
- வெற்றி பெற்ற மாணவியை பள்ளியின் சேர்மன் சிவசேதுராமன், தாளாளர் திருமாறன், பள்ளியின் முதல்வர் முருகவேல் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
நெல்லை:
தெலுங்கானாவில் அகில இந்திய சப்-ஜுனியர் பாட்மிண்டன் போட்டி நடைபெற்றது. இதில்
வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ரேஷிகா இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் தங்கம் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
வெற்றி பெற்ற மாணவியை பள்ளியின் சேர்மன் சிவசேதுராமன், தாளாளர் திருமாறன், பள்ளியின் முதல்வர் முருகவேல், உடற்கல்வி இயக்குநர் உமாநாத், உடற்கல்வி ஆசிரியர்கள் மோகன்குமார், பாலமுருகன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.