- சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ.பள்ளியில் உலக தண்ணீர் வாரவிழா நடந்தது.
- நீரின் பயன்பாடுகள் குறித்து கவிதை, ஊமைநாடகம், நீரைப்பற்றிய திருக்குறள் ஒப்புவித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளியில் உலக தண்ணீர் வாரவிழா நடந்தது. சிறப்பு விருந்தினராக ராஜபாளையம் ரோட்டரி சங்க தலைவர் வைமா திருப்பதிசெல்வன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ராதா, செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் பங்கேற்றனர். பள்ளி சேர்மன் குமரேசன் தலைமை தாங்கினார்.
முதன்மை செயல் அதிகாரி அரவிந்த், முதல்வர் அனுசுயா, துணைமுதல்வர் சவுந்திரபாண்டி என்ற சவுந்தரி, ஆலோசகர் பாரதி, நிர்வாக அதிகாரி அமுதா முன்னிலை வகித்தனர். 8-ம் வகுப்பு மாணவி கிருத்திகா வரவேற்றார். நீர் நிலைகளில் வாழும் உயிரினங்கள், நீரின் பயன்பாடுகள் குறித்து கவிதை, ஊமைநாடகம், நீரைப்பற்றிய திருக்குறள் ஒப்புவித்தல், நடனம் போன்ற நிகழ்ச்சிகளை மாணவர்கள் நடத்தினர். நீரின் அவசியம் குறித்து கட்டுரை, ஓவியம், பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன.