உள்ளூர் செய்திகள்

தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. மாணவருக்கு சைக்கிள் வழங்கிய போது எடுத்த படம்.




மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

Published On 2022-08-13 08:39 GMT   |   Update On 2022-08-13 08:39 GMT
  • நாடார் மேல்நிலை பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
  • ராஜபாளையம் எம்.எல்.ஏ. வழங்கினார்.

ராஜபாளையம்

ராஜபாளையம் ரெயில்வேபீடர் ரோட்டில் உள்ள கிருஷ்ண மராஜ பாளையம் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட நாடார் மேல்நிலையில் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் தலைமை தாங்கினார். டி.எஸ்.பி. ப்ரித்தி முன்னிலை வகித்தார்.

விழாவில் மாணவ, மாணவியர்கள் போதைப்பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதனைத்தொடர்ந்து தமிழக அரசு வழங்கும் விலையில்லா சைக்கிள்களை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. மாணவ-மாணவியர்களுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் விஜயராஜன், உறவின் முறை தலைவர் ஆதவன், தலைமை ஆசிரியர் வெங்கடேசன்,தி.மு.க நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, கவுன்சிலர்கள் பாரத், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News