உள்ளூர் செய்திகள்

விண்ணப்பம் பெற கால அவகாசம் நீட்டிப்பு

Published On 2022-08-05 10:04 GMT   |   Update On 2022-08-05 10:04 GMT
  • பட்டிய பயிற்சி விண்ணப்பம் பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேலாண்மை கூட்டுறவு பயிற்சி நிலையத்தில் தற்போது பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பங்கள் பெறுவதற்கு வருகிற 18-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வருகிற 22-ந் தேதி மாலை 5 மணிக்குள் சாத்தூர் மேலாண்மை நிலையத்திற்கு தபால் மூலமாகவோ, கூரியர் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.

பயிற்சி கட்டணம் ரூ.18 ஆயிரத்து 850 ஆகும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாணவ-மாணவிகள் கூட்டுறவு பட்டய பயிற்சியில் சேருவதற்கு மேலாண்மை நிலைய முதல்வரை அணுகலாம்.

மேற்கண்ட தகவலை விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News