உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளி மாணவர் சங்க கருத்தரங்கு

Published On 2022-09-29 08:41 GMT   |   Update On 2022-09-29 08:41 GMT
  • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் மாற்றுத்திறனாளி மாணவர் சங்க கருத்தரங்கு நடந்தது.
  • உதவிப்பேராசிரியர் சாந்தி நன்றி கூறினார்.

சிவகாசி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் இளைஞர் மன்றம் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர் சங்கம் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.

இதில் ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியை அர்ச்சனாதேவி பங்கேற்று ''விடாமுயற்சி-வெற்றியின் திறவுகோல்'' என்ற தலைப்பில் பேசினார். மாணவர்கள் தமக்குள்ள திறமைகளைப் பயனுள்ள வகையில் வெளிகொணருவதற்கான வழிமுறைகளைத் எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்வில் மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் 40 மாணவர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை இளைஞர் மன்ற அமைப்பாளர் விஜயலட்சுமி, மாற்றுத்திறனாளி மாணவர் சங்க அமைப்பாளர் மதுமதி ஆகியோர் செய்திருந்தனர்.

2-ம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவர் அருண் பாண்டியன் வரவேற்றார். 3-ம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவர் ஜெயக்குமார் நன்றியு கூறினார்.

சிறப்பு ெசாற்பொழிவு

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ஆங்கிலத்துறை இலக்கிய மன்றம் சார்பில் சிறப்புச்சொற்பொழிவு நடந்தது. இதில் விருந்தினராக விருதுநகர் காமராஜ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி உதவிப்பேராசிரியர் கயல்விழி பங்கேற்று ''நிகழ்நிலை நெறி முறைகளுக்கான வழிகாட்டுதல்'' என்ற தலைப்பில் பேசினார்.

அவர் பேசுகையில், மாணவர்கள் நிகழ்நிலை தளங்களை பயனள்ள முறையில் பயன்படுத்துவதற்கான நெறிமுறைகளை செயல்பாடுகளின் மூலம் எடுத்துரைத்தார். முன்னதாக உதவிப்பேராசிரியர் அர்ச்சனாதேவி, வரவேற்றார்.

துறைத் தலைவர் பெமினா தொடக்கவுரை ஆற்றினார். உதவிப்பேராசிரியர் சாந்தா கிறிஸ்டினா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். உதவிப்பேராசிரியர் சாந்தி நன்றி கூறினார்.

Tags:    

Similar News