உள்ளூர் செய்திகள்

மாநில கல்வி ெகாள்கை குறித்த கருத்து கேட்பு கூட்டம்

Published On 2022-09-13 08:01 GMT   |   Update On 2022-09-13 08:01 GMT
  • விருதுநகர் மாவட்டத்தில் மாநில கல்வி ெகாள்கை குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடக்கிறது.
  • மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் கீழ்கண்ட பள்ளிகளில் இந்த கூட்டம் நடக்கிறது.

விருதுநகர்

தமிழ்நாட்டில் மாநிலத்திற்கென தனித்துவமான மாநில கல்வி கொள்கை வகுப்பதற்காக விருதுநகர் மாவட்டத்தில் கல்வி மாவட்ட அளவிலான கருத்து கேட்பு கூட்டம் நாளை (14-ந் தேதி) மதியம் 2 மணியளவில் நடக்கிறது.

மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் கீழ்கண்ட பள்ளிகளில் இந்த கூட்டம் நடக்கிறது. விருதுநகர் கல்வி மாவட்டத்தில் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் தியாகராஜா மேல்நிலைப்பள்ளியிலும், சிவகாசி கல்வி மாவட்டத்தில் எஸ்.எச்.என்.வி. மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நாளை மதியம் 2 மணிக்கு நடக்கிறது.

இந்த கூட்டத்தில் கல்வியாளர்கள், தலைமையாசிரியர்கள், பத்திரிக்கையாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொள்ளலாம். கருத்து தெரிவிக்க விரும்புவோர் தங்களது கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்து இந்த கூட்டத்தில் ஒப்படைக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News