உள்ளூர் செய்திகள்

26 பேர் மீது வழக்கு

Published On 2022-08-22 14:03 IST   |   Update On 2022-08-22 14:03:00 IST
  • 2 பேரை சரமாரியாக தாக்கிய 26 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • கொட்டகையில் சிலர் மது குடித்து கொண்டிருந்தனர்.

விருதுநகர்

சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி அர்ச்சுனா நதி படுகையில் அமைக்கப்பட்டுள்ள கொட்டகையில் சிலர் மது குடித்து கொண்டிருந்தனர். இதனை கொட்டகை உரிமையாளர் ராமதாஸ் தட்டிக்கேட்டுள்ளார்.

இதில் ஏற்பட்டுள்ள வாக்குவாதத்தில் ராமதாஸை அந்த கும்பல் தாக்கியது. இதை தடுக்க வந்த விக்ரம் என்பவரும் தாக்கப்பட்டார். இதுகுறித்து இருக்கன்குடி போலீசார் விசரணை நடத்தி நெல்லையை சேர்ந்த அய்யப்பன், குமரேசன், ராகுல், வெள்ளைபாண்டி மற்றும் 6 பெண்கள் உள்பட 26 பேர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News