உள்ளூர் செய்திகள்
- தொழிலாளி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என ராஜபாளையம் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
ராஜபாளையம் பெரிகடை பஜாரை சேர்ந்தவர் காசிராஜா (45). தனியாக வசித்து வந்த இவருக்கு நோய் பாதிப்பு இருந்தது. இந்த நிலையில் காசிராஜா வீட்டில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என ராஜபாளையம் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அருப்புக்கோட்டை பெரியகட்டங்குடியைச் சேர்ந்தவர் முனியாண்டி (75). நோய் பாதிப்பு கொடுமை காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கீழ திருத்தங்கல்லைச் சேர்ந்தவர் மாரீஸ்வரன் (25), பட்டாசு தொழிலாளி. கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி ராஜேஸ்வரி பிரிந்து சென்று விட்டார். இதில் விரக்தியடைந்த மாரீஸ்வரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.