உள்ளூர் செய்திகள்

பட்டாசு தயாரித்த 2 பேர் கைது

Published On 2022-08-18 09:26 GMT   |   Update On 2022-08-18 09:26 GMT
  • அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் கைது செய்யப்பட்டார்.
  • அவர்கள் வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர்

சாத்தூர் அருேக அழகாபுரி பகுதியில் அனுமதியின்றி பட்டாசுகளை தயாரிப்பதாக சாத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு பண்டல் பண்டலாக பட்டாசுகள் தயாரித்து வைத்திருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அனுமதியின்றி பட்டாசு தயாரித்த சாயல்பட்டியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (வயது 59), இரவார்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (51) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

Similar News