உள்ளூர் செய்திகள்

இளம்பெண், 10-ம் வகுப்பு மாணவர், செவிலியர் மாயம்

Published On 2023-11-19 07:55 GMT   |   Update On 2023-11-19 07:55 GMT
  • இளம்பெண், 10-ம் வகுப்பு மாணவர், செவிலியர் மாயமானர்கள்.
  • மாரனேரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

விருதுநகர்

விருதுநகரத் அருகேயுள்ள மல்லாங்கிணறு அண்ணா நகரை சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 29). இவரது மனைவி தெய்வலட்சுமி (25). சுப்பு ராஜ் தனியார் நிறுவனத் தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இதற்கி டையே தெய்வலட்சுமி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது கணவர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் மனைவியை கண்டுபிடிக்க முடியவில்லை.

வாலிபருடன் காதல்

திருமணத்துக்கு முன்ன தாக தெய்வலட்சுமி அயன் ரெட்டியபட்டியைச் சேர்ந்த மாரிக்கனி என்பவரை காத லித்து வந்துள்ளார். அத னால் ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் சுப்புராஜ் மல்லாங்கிணறு போலீசில் புகார் கொடுத்தார். போலீ சார் வழக்குப்பதிவு செய்து மாயமான தெய்வலட்சுமியை தேடி வருகிறார்கள்.

பள்ளி மாணவர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே யுள்ள வத்திராயிருப்பை சேர்ந்த சேர்வை என்பவரது மகன் 16 வயதுடைய 10-ம் வகுப்பு மாணவர் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீடு திரும்பிய அவர் பின்னர் மாயமானார். இதுபற்றி அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் வத்திராயிருப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நர்சு மாயம்

சிவகாசி அருகேயுள்ள மணியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கசின்னம்மா (வயது 40). இவரது 18 வயது மகள் 10-ம் வகுப்பு முடித்து விட்டு விருதுநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கி நர்சாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று பணி முடிந்து வீடு திரும்பிய அவர் வெளியில் சென்றார்.

அதன்பிறகு அவரை காண வில்லை. இதுகுறித்து தங்க சின்னம்மா கொடுத்த புகா ரின் பேரில் மாரனேரி போலீசார் விசாரித்து வருகி றார்கள்.

Tags:    

Similar News