உள்ளூர் செய்திகள்

வளைகாப்பு விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு சீதனப் பொருட்களை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

Published On 2022-10-14 08:22 GMT   |   Update On 2022-10-14 08:22 GMT
  • வளைகாப்பு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
  • விழாவில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம், சாத்தூர் யூனியன் தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், வட்டாட்சியர் ரங்கராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் முன்னிலை வகித்தார்.

இதில் 250 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்களை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார். மேலும், வருவாய்த்துறை சார்பில், 36 பயனாளிகளுக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.36 ஆயிரம் மதிப்பில் முதியோர் உதவித்தொகைகளையும், 65 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சத்து 97 ஆயிரத்து 215 மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் என மொத்தம் 101 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சத்து 33ஆயிரத்து 215 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.பின்னர் கலெக்டர் பேசுகையில், ஒரு குழந்தையின் வளர்ச்சி, கருவாக உருவான நாளில் இருந்தே ஆரம்பமாகிறது. இதனை மனதில் கொண்டு கர்ப்பிணி பெண்கள், கர்ப்ப காலத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் தான், அவர்களுக்கு பிறக்கும் குழந்தை ஆரோக்கியமான, அறிவான குழந்தையாக இருக்கும் என்பது அறிவியல் பூர்வமான நிகழ்ச்சியாகும்.

வசதி வாய்ப்பு குறைவால் இந்த நிகழ்ச்சியை நடத்த முடியாத குடும்பத்தில் உள்ள கர்ப்பிணிகளுக்கு இந்த வாய்ப்பும் நன்மை யும் கிடைக்காமல், அவர்களின் குழந்தைகள் பாதிக்கப்படக் கூடாது என்ற தொலைநோக்குப் பார்வையுடன் செயல்ப டுத்தப்பட்டு வரும் திட்டம் இந்த வளைகாப்பு திட்டம் ஆகும்.

சாதி, மத வேறுபாடின்றி கர்ப்பிணி தாய்மார்களும் இந்த திட்டத்தால் பயன்பெற்று வருகிறார்கள்.வருங்கால சந்ததியரை உருவாக்கும் அனைத்து கர்ப்பிணி தாய்மார்களும், கர்ப்பகாலத்தில் ஊட்டச்சத்து உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்று, வளமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றார்.

விழாவில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம், சாத்தூர் யூனியன் தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், வட்டாட்சியர் ரங்கராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News