உள்ளூர் செய்திகள்

சாம்பியன் பட்டம் பெற்ற வைமா வித்யாலயா பள்ளி மாணவ-மாணவிகள்.

வைமா வித்யாலயா பள்ளி சாம்பியன்

Published On 2022-08-11 08:50 GMT   |   Update On 2022-08-11 08:50 GMT
  • யோகா போட்டியில் வைமா வித்யாலயா பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது.
  • 57 மாணவர்கள் கலந்து கொண்டு பல்வேறு ஆசனங்களை செய்து காட்டினர்.

ராஜபாளையம்

மாநில அளவிலான யோகாசனப்போட்டி சாத்தூர் கிருஷ்ணசாமி கல்லூரியில் நடந்தது. பல்வேறு பள்ளிகளில் இருந்து 458 பேர் கலந்து கொண்ட இந்த போட்டியில் ராஜபாளையம் வைமா வித்யாலயா பள்ளியில் இருந்து 57 மாணவர்கள் கலந்து கொண்டு பல்வேறு ஆசனங்களை செய்து காட்டினர்.

கிருஷ்ணசாமி கல்லூரியின் முதல்வர் ராஜேஸ்வரி, பேராசிரியர் கண்ணன் சிவகாசி எஸ்.எப்.ஆர். கல்லூரி சேர்மன் அருண்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு யோகா செய்து காட்டிய மாணவர்களைப் பாராட்டி வைமா வித்யாலயாவிற்கு "சாம்பியன் ஆப் சாம்பியன்" பட்டத்தை வழங்கினர். வைமா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வைமா திருப்பதி செல்வன், மேனேஜிங் டிரஸ்டி அருணாதேவி மற்றும் ஆசிரியர்-ஆசிரியைகள் கேடயமும், பரிசும் பெற்ற மாணவர்களைப் பாரா ட்டினர்.

மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்த யோகக் கலை பயிற்றுநர் இசக்கி முத்து மற்றும் ஆசிரியைகள் முத்துமாரி, ராமராதா, ராஜலட்சுமி, கீதாஞ்சலி, முத்துமணி ஆகியோரை பள்ளி நிர்வாகம் பாராட்டியது.

Tags:    

Similar News