உள்ளூர் செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்து முதியவர் சாவு

Published On 2022-10-13 08:47 GMT   |   Update On 2022-10-13 08:47 GMT
  • கிணற்றில் தவறி விழுந்து முதியவர் இறந்தார்.
  • தோப்புக்கு குளிக்க சென்ற கந்தசாமி இரவு வரை வீடு திரும்பவில்லை.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது80). இவருக்கு இப்பகுதியில் சொந்தமாக தென்னந்தோப்பு உள்ளது. நேற்று முன்தினம் மாலை தோப்புக்கு குளிக்க சென்ற கந்தசாமி இரவு வரை வீடு திரும்பவில்லை. அவரது மகன் பொன்னுசாமி தோட்டத்திற்கு சென்று பார்த்த போது கிணற்றின் அருகே அவரது ஆடைகள் இருந்தது.

தந்தை குளிக்கும் போது கிணற்றில் தவறி விழுந்து இருக்கலாம் என நினைத்து தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்தார். அதிக அளவு தண்ணீர் இருந்ததால் தேடுவதில் சிரமம் ஏற்பட்டது. நேற்று மதியம் முதியவரின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News