உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

Published On 2023-05-04 07:21 GMT   |   Update On 2023-05-04 07:21 GMT
  • விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
  • இதுகுறித்து சேத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த சொக்க நாதன்புத்தூர் மண்ட கப்படி தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மனைவி சந்தன செல்வி (வயது27). இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவர் முத்துபாண்டி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சந்தனசெல்வி வங்கியில் அடகு வைத்த நகையை மீட்பதற்காக தனது தாய் தங்கமாடத்தி வீட்டுக்கு வந்தார். அவர் நகையை திருப்பிவிட்டு வீட்டுக்கு வந்த நிலையில் திடீரென மயங்கி விழுந்தார். அவர் விஷம் குடித்தி ருப்பது தெரியவந்ததும் அவரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தங்கமாடத்தி சேத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து சந்தனசெல்வி தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News