உள்ளூர் செய்திகள்

டேபிள் டென்னிஸ் போட்டி: எஸ்.பி.கே. பள்ளி மாணவர்கள் சாதனை

Published On 2023-07-19 07:49 GMT   |   Update On 2023-07-19 07:49 GMT
  • மாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டியில் எஸ்.பி.கே. பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
  • 6-ம் வகுப்பு மாணவர் தேஜஸ் ஒற்றையர் போட்டியில் 2-ம் இடம் பெற்று சான்றிதழ்கள் பெற்றனர்.

அருப்புக்கோட்டை

சிவகாசி ரோட்டரி கிளப் சார்பில் விருதுநகர் மாவட்ட அளவிலான மாணவ- மாணவிகளுக்கான டேபிள் டென்னிஸ் போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் நடை பெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. மேல்நிலைப் பள்ளி 12-ம் வகுப்பு மாணவர் சந்தோஷ், ஒற்றையர் போட்டியில் முதலிடம் பெற்றும் இரட்டையர் போட்டியில் 12-ம் வகுப்பு மாணவர்கள் சந்தோஷ், பிரகதீஸ்வரன், ஆகிய இருவரும் முதலிடம் பெற்று கேடயங்கள் சான்றிதழ்கள் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றனர்.

ஒவ்வொரு பிரிவிலும் 58 மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் யூ 17 பிரிவில் 11-ம் வகுப்பு மாணவர் விமல் இரட்டையர் போட்டியில் 3-ம் இடம் பெற்றும், யூ-13 பிரிவில் 6-ம் வகுப்பு மாணவர் தேஜஸ் ஒற்றையர் போட்டியில் 2-ம் இடம் பெற்று சான்றிதழ்கள் பெற்றனர்.

மேலும் இந்த பள்ளி மாணவர்கள் அதிக புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றனர். சாம்பியன் பட்டம் வென்ற எஸ்.பி.கே. மேல்நிலைப்பள்ளி டேபிள் டென்னிஸ் வீரர்களையும் ஊக்குவித்த உடற் கல்வி இயக்குனர் சவுந்தர பாண்டியன் மற்றும் உடற் கல்வி ஆசிரியர்களையும் நாடார்கள் உறவின்முறை தலைவர் காமராஜன், எஸ்.பி.கே. கல்வி குழும தலைவர் ஜெயக்குமார், பள்ளி செயலாளர் கவுன்சிலர் மணி முருகன், பள்ளி தலைவர் சிவராம கிருஷ்ணன், உதவி தலைவர் கனகவேல், உதவி செயலா ளர் தங்கராஜ், தலைமை ஆசிரியர் ஆனந்தராஜன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News