உள்ளூர் செய்திகள்

சுக்கிரவார ஊஞ்சல் சேவை

Published On 2023-06-10 09:38 GMT   |   Update On 2023-06-10 09:38 GMT
  • ஆண்டாள் கோவிலில் சுக்கிரவார ஊஞ்சல் சேவை நடந்தது.
  • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

108 வைணவத் திருத்தலங்களில் பிரசித்தி பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில். இங்கு ஆடிப்பூரம், வைகுண்ட ஏகாதசி, மார்கழி எண்ணெய் காப்பு உற்சவம், பங்குனி திருக்கல்யாணம் உள்ளிட்ட திருவிழாக்கள் விமரிசையாக நடைபெறும். மேலும் ஆண்டு முழுவதும் பல்வேறு வைபவங்கள் நடைபெறும். அதில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் ஆண்டாள்-ரெங்கமன்னாருக்கு நடைபெறும் ஊஞ்சல் சேவை பிரசித்தி பெற்றது.

அதன்படி வைகாசி மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று சுக்கிர வார ஊஞ்சல் சேவை நடந்தது. சர்வ அலங்காரத்தில் ஆண்டாள்- ரெங்கமன்னார் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சிய ளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆண்டாள்கோவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News