உள்ளூர் செய்திகள்

சிவகாசி காளீஸ்வரி கல்லூரி: ஆங்கிலத்துறை இலக்கிய மன்ற தொடக்க விழா

Published On 2022-08-10 08:51 GMT   |   Update On 2022-08-10 08:51 GMT
  • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் ஆங்கிலத்துறை இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது.
  • இந்த நிகழ்ச்சியில் ஆங்கிலத்துறையை சேர்ந்த 115 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

சிவகாசி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் ஆங்கிலத்துறை இலக்கிய மன்றத்தின் தொடக்க விழா மற்றும் மாணவர்களுக்கான திறனறிப்போட்டிகள் நடந்தன. துணை முதல்வர் பாலமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

துறைத்தலைவர் பெமினா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். ''ஆளுமை வளர்ச்சி மற்றும் மென்திறன்'' என்ற தலைப்பில் சிறப்பு விருந்தினர் பேசினார்.

இலக்கிய மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அதன்பின்னர் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நாடகம், நடனம், ஆங்கிலப் பாட்டுப்போட்டி, இலக்கிய அணிவகுப்பு, மவுன நாடகம் போன்ற போட்டிகள் நடந்தன.

முதுகலை 2-ம் ஆண்டு மாணவி மரிய கிறிஸ்டினா வரவேற்றார்.

இளங்கலை 3-ம் ஆண்டு மாணவர் பிரதீப் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஆங்கிலத்துறையை சேர்ந்த 115 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News