உள்ளூர் செய்திகள்

சத்யா வித்யாலயா பள்ளி பட்டமளிப்பு விழா

Published On 2023-04-05 13:57 IST   |   Update On 2023-04-05 13:57:00 IST
  • ஸ்ரீவில்லிபுத்தூர் சத்யா வித்யாலயா பள்ளியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
  • பாலர் வகுப்பு மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் பிள்ளையர்குளம் சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளியில் பாலர் வகுப்பு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது. மாணவி கவியாழினி வரவேற்றார். பள்ளி குழுமத்தலைவர் குமரேசன், மேனேஜிங் டிரஸ்டி டாக்டர் சித்ரா குமரேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். முதல்வர் அனுசியா, துணை முதல்வர் சவுந்திரபாண்டி என்ற சவுந்தரி, ஆலோசகர் பாரதி, நிர்வாக அதிகாரி அமுதா முன்னிலை வகித்னர். சிறப்பு விருந்தினராக ராஜபாளையம் நகர் மன்ற தலைவி பவித்ரா ஷியாம் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினரை ஆங்கிலத்துறை ஆசிரியை இந்திரா ரவீந்திரன் அறிமுகம் செய்து வைத்தார். பள்ளி குழுமத்தலைவர் குமரேசன் விருந்தினர்களை கவுரவித்தார். பாலர் வகுப்பு மாணவி தீபிகா திருக்குறள் ஒப்பிவித்தார். ஆசிரியை கற்பகமாரி, மாணவி ஸ்ரீஷா ஆகியோர் பேசினர். பாலர் வகுப்பு மாணவர்கள் பாடல்கள் பாடியும், நடனமாடியும் மகிழவித்தனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் சிறப்பு விருந்தினர் வழங்கி பேசினார். பாலர் வகுப்பு மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. மாணவர் சித்தார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News