உள்ளூர் செய்திகள்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றபோது எடுத்த படம்.

சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி

Published On 2023-10-04 08:08 GMT   |   Update On 2023-10-04 08:08 GMT
  • சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி நடந்தது.
  • திருச்சுழி உட்கோட்ட பகுதியை சேர்ந்த சாலைப் பணியாளர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருச்சுழி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பூமிநாதர் கோவில் வாசலில் இருந்து தொடங் கிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை திருச்சுழி நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறி யாளர் கணேசன் தொடங்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு பேரணியில் போக்குவரத்து சின்னங்களை பின்பற்றுதல், மது அருந்தி வாகனம் ஓட்டா தே, தலைக்கவசம் அணிவ தன் அவசியம் என்பது போன்ற பல்வேறு வாசகங் கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி விழிப்புணர்வு வாசகங்களை முழக்கமிட்ட வாறு முக்கிய வீதிகள் வழி யாக ஊர்வலமாக வந்தனர்.

மேலும் சாலையில் தலை கவசம் அணிந்து சாலை விதிகளையும், பாதுகாப்பு அம்சங்களோடு பின்பற்றி வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு கோஷங்கள் மற்றும் சாலை பாதுகாப்பு ஆண்டுக்கான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங் கப்பட்டன.

இந்த விழிப்புணர்வு பேரணி பூமிநாதர் கோவி லில் இருந்து தொடங்கி திருச்சுழி நெடுஞ் சாலைத் துறை உட்கோட்ட அலுவல கம் வரை நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு பேரணி யில் உதவிப்பொறியாளர் சுந்தரபாண்டியன், சாலை ஆய்வாளர்களான முத்து செல்வம், சுந்தர வள்ளி மற் றும் திருச்சுழி உட்கோட்ட பகுதியை சேர்ந்த சாலைப் பணியாளர் கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News