உள்ளூர் செய்திகள்

புத்தக திருவிழாவில் புத்தகம் வாங்குபவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு

Published On 2022-11-24 12:59 IST   |   Update On 2022-11-24 12:59:00 IST
  • விருதுநகர் புத்தகத் திருவிழாவில் புத்தகம் வாங்குபவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும்.
  • மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

விருதுநகர்

விருதுநகர் முதலாவது புத்தகத் திருவிழா கே.வி.எஸ். பொருட்காட்சி மைதானத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தினமும் ஏராளமானோர் கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் புத்தகம் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் இன்று (24-ந் தேதி) முதல் ரூ.200-க்கு மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தினசரி குலுக்கல் முறையில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.6 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.4 ஆயிரம், அன்றைய இரவே சிறப்பு விருந்தினர்களால் பரிசு வழங்கி கவுரவிக்கப்படும்.

மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News