உள்ளூர் செய்திகள்

நீர்நிலைகளை நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குடிநீர் சீராக வழங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Published On 2023-07-19 08:15 GMT   |   Update On 2023-07-19 08:15 GMT
  • ராஜபாளையத்தில் குடிநீர் சீராக வழங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்.
  • நீர்நிலைகளில் நகர்மன்ற தலைவி ஆய்வு செய்தார்.

ராஜபாளையம்

ராஜபாளையம் நகராட்சிக்கு சொந்தமான மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளான அய்யனார் கோவில் குடிநீர் தேக்க தொட்டிகளில் நீர்வரத்து குறைந்து கொண்டே வருவதால் நீர்நிலை அளவும் குறைந்து கொண்டு வருகிறது.

இதனையடுத்து ராஜபாளையம் நகருக்கு குடிநீர் சீராக வழங்க முன்எச்சரிக்கை நடவ டிக்கைகளை நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் மேற்கொண்டார்.

நீர் நிலைகளை மேம் படுத்த கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் மோட்டார் மூலமாக தண்ணீர் எடுத்து விநியோ கம் செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சேதமடைந்திருந்த மின் இணைப்புகள் மற்றும் மோட்டார்களை துரிதமாக சரிசெய்யப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

நீர்த்தேக்க தொட்டி மற்றும் கிணறுகளின் நீர்நிலைகளை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பணிகளை துரிதப்படுத்தினார்.

நகர்மன்ற உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணராஜா, குமார், ஞானவேல், சங்கர் கணேஷ், சுரேஷ், சிங்கராஜ், சுப்புலட்சுமி, வார்டு செயலாளர் கண்ணன், நகராட்சி பிட்டர் ராஜ்குமார், விஜி, மற்றும் பால் பாண்டி இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News