உள்ளூர் செய்திகள்

கவர்னர் வருகை ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.

போலீசார்-அதிகாரிகள் ஆலோசனை

Published On 2023-03-31 13:57 IST   |   Update On 2023-03-31 13:57:00 IST
  • கவர்னர் வருகையை முன்னிட்டு போலீசார்-அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

ராஜபாளையம்

ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியின் பொன் விழா மற்றும் சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியின் 60-வது ஆண்டு தொடக்க விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ராஜபாளையத்திற்கு நாளை (1-ந் தேதி) வருகிறார்.

அவர் காலை 7 மணியளவில் ஸ்ரீங்கேரி சாரதாம்பாள் கோயில் மற்றும் மாப்பிள்ளை விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

இதையொட்டி செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி, வட்டாட்சியர் ராமச்சந்திரன், நகராட்சி ஆணையர் பார்த்த சாரதி, ஆளுநரின் பாது காப்பு ஆய்வாளர் தாமஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News