உள்ளூர் செய்திகள்
கழிப்பிட வசதி இல்லாததால் பயணிகள் அவதி
- அருப்புக்கோட்டை பஸ் நிலையத்தில் கழிப்பிட வசதி இல்லாததால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
- ஏற்கனவே இருந்த நகராட்சி கழிப்பிடம் சேதம் அடைந்து மோசமான நிலையில்உள்ளது.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டையில் மதுரை சாலையில் புதிய பஸ் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து 50-க்கும் மேற்பட்ட கிராமத்திற்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் 1000-க்கும் மேற்பட்டபயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த பஸ் நிலையத்தில் ஏற்கனவே இருந்த நகராட்சி கழிப்பிடம் சேதம் அடைந்து மோசமான நிலையில்உள்ளது.இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை திறந்தவெளியில் சிறுநீர், மலம் கழித்து வருகின்றனர்
இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கழிப்பறை வசதி இல்லாததால் பெண்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
உடனடியாக நகராட்சி நிர்வாகம் புதிய பஸ் நிலையத்தில் கழிப்பிட வசதி செய்து தருமாறு பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.