உள்ளூர் செய்திகள்

செவிலியர் மங்கம்மாளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய விருது-சான்றிதழ் வழங்கினார்.

அர்ப்பணிப்புடன் பணியாற்றிய செவிலியருக்கு தேசிய விருது

Published On 2022-11-15 09:27 GMT   |   Update On 2022-11-15 09:38 GMT
  • விருதுநகரில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய செவிலியருக்கு தேசிய விருதை ஜனாதிபதி வழங்கினார்.
  • இவரது சேவையை பாராட்டி இந்திய செவிலிய குழுமம் மங்கம்மாளுக்கு தேசிய விருது அளிக்க பரிந்துரை செய்தது.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் மங்கம்மாள் (வயது55). அரசு செவிலியராக பணியில் சேர்ந்த இவர் கடந்த 37 வருடங்களாக கன்னிசேரி புதூர், எம்.ரெட்டியபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம உதவி செவிலியராக பணியாற்றி உள்ளார். பணியில் இருந்த போது அர்ப்பணிப்பு சேவையுடன் நோயாளிகளுக்கு மங்கம்மாள் சேவை செய்தார். தற்போது இவர் ஆர்.ரெட்டியபட்டியில் உதவி செவிலியராக உள்ளார்.

இவரது சேவையை பாராட்டி இந்திய செவிலிய குழுமம் மங்கம்மாளுக்கு தேசிய விருது அளிக்க பரிந்துரை செய்தது. அதன்படி மத்திய அரசு அவருக்கு தேசிய விருது அளித்தது. இதனை டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பாராட்டு சான்றிதழை வழங்கி மங்காம்மாவை பாராட்டினார்.

அர்ப்பணிப்புடன் பணியாற்றிய மங்கம்மாள் தேசிய விருது பெற்று விருதுநகர் மாவட்டத்தை பெருமை அடைய செய்துள்ளார்.

Tags:    

Similar News