உள்ளூர் செய்திகள்

ஊக்கமளிப்பு நிகழ்ச்சி

Published On 2023-07-23 08:26 GMT   |   Update On 2023-07-23 08:26 GMT
  • ஊக்கமளிப்பு நிகழ்ச்சி நடந்தது.
  • ஒருங்கிணைப்பாளர் யாஷ்மின் பீவி செய்திருந்தார்.

சிவகாசி

சிவகாசி தி ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் ராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் தலைசிறந்த படைப்பு என்ற தலைப்பில் முதலாமாண்டு இளங்கலை மற்றும் இளநிலை பயிலும் மாணவர்களுக்கு ஊக்க மளிக்கும் விரிவுரை நடைபெற்றது. கல்லூரி தலைவர் திலகவதி, ரவிந்தீரன் மற்றும் கல்லூரி செயலாளர் அருணா அசோக் ஆகியோர் தலைமை வகித்தனர். கல்லூரி முதல்வர் சுதா பெரியதாய் முன்னிலையில் முதுகலை முதலாமாண்டு ஆங்கிலத் துறை மாணவி ஹஜிரா பானு வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ரிச்சாட் ராஜ் கலந்து கொண்டு பேசினார். முதுகலை முதலாம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவி பிருந்தா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஆளுமை வளர்ச்சி குழு ஒருங் கிணைப்பாளர் யாஷ்மின் பீவி செய்திருந்தார்.

Tags:    

Similar News