உள்ளூர் செய்திகள்

கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய அமைச்சு பணியாளர்கள்

Published On 2023-04-21 08:19 GMT   |   Update On 2023-04-21 08:19 GMT
  • விருதுநகர் அருகே கோரிக்கை அட்டை அணிந்து அமைச்சு பணியாளர்கள் பணியாற்றினர்.
  • 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3நாட்கள் இந்த போராட்டம் நடந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மொட்டமலையில் உள்ள 11-வது பட்டாலியனில் பணியாற்றும் காவல்துறை அமைச்சு பணியாளர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3நாட்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர்.

புதிதாக பிரிக்கப்பட்டுள்ள ஆவடி, தாம்புரம் காவல் ஆணையரகம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, தென்காசி மாவட்டங்களுக்கு கூடுதல் அமைச்சு பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

காவல்துறை குடியிருப்புகளில் அமைச்சு பணியாளர்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 19, 20, 21-ந்தேதி ஆகிய 3நாட்கள் கோரிக்கை அட்டை அணியும் போராட்டம் நடந்தது.

நேற்று 11-வது பட்டாலியனில் கிளை தலைவர் கண்காணிப்பாளர் பாலா, செயலாளர் முருகானந்தம் தலைமையில் 35அமைச்சு பணியாளர்களும் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர்.

Tags:    

Similar News