உள்ளூர் செய்திகள்

ஜி.சக்தி கிருபா

முதலிடம் பெற்ற காளீஸ்வரி கல்லூரி மாணவிக்கு பாராட்டு

Published On 2023-04-16 07:28 GMT   |   Update On 2023-04-16 07:28 GMT
  • முதலிடம் பெற்ற காளீஸ்வரி கல்லூரி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
  • கல்லூரி செயலாளர் செல்வராசன், முதல்வர் பாலமுருகன் பாராட்டினர்.

சிவகாசி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஆங்கிலத்துறை முதுகலை 2-ம் ஆண்டு மாணவி ஜி.சக்தி கிருபா, தமிழக அரசின் மாநில சிறுபான்மையினர் ஆணையம் நடத்திய 2023-ம் ஆண்டிற்கான அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான ஆங்கில பேச்சுப்போட்டியில் பங்கேற்றார்.

''மானுட சேவையின் தேவை'' என்ற தலைப்பில் பேசிய அவர் மாவட்ட அளவிலான முதல் பரிசு ரூ.20 ஆயிரத்தை பெற்றார்.

பரிசு பெற்ற மாணவி சக்தி கிருபாவை, கல்லூரி செயலாளர் செல்வராசன், முதல்வர் பாலமுருகன், ஆங்கிலத்துறைத் தலைவர் பெமினா மற்றும் ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News