உள்ளூர் செய்திகள்

கல்பனா சாவ்லா விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

Published On 2022-06-22 10:33 GMT   |   Update On 2022-06-22 10:33 GMT
  • கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்றக்கப்படுகிறது.
  • இந்த தகவலை கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தனித்தன்மையுடன் கூடிய வீரமான, தைரியமிக்க, எதையும் எதிர்கொள்ளக் கூடிய ஆற்றல் மிக்க ஒரு பெண்மணிக்கு, அவரது துறை சார்ந்த பணிக்காக அல்லது அவரது நடவடிக்கைக்காக 'கல்பனா சாவ்லா விருது" ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2022 -ம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட உள்ளது .

விண்ணப்பங்கள் பெற http://awards.tn.gov.in/ என்ற இணை வழியாக மட்டும் 30.06.2022 -ற்குள் பூர்த்தி செய்து அனுப்பிட வேண்டும்.

விளையாட்டு துறை சார்ந்த 'கல்பனா சாவ்லா விருது" -ற்கான பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 26.06.2022 -ம் தேதிக்குள் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் பரிந்துரையுடன் விண்ணப்பத்தினை உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை- 600 003 என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News