உள்ளூர் செய்திகள்

பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்.

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

Published On 2023-05-21 08:07 GMT   |   Update On 2023-05-21 08:07 GMT
  • இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் இன்று பக்தர்கள் குவிந்தனர்.
  • அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

சாத்தார்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் பிரசித்திபெற்ற கோவிலா கும். இங்கு ஆண்டு முழு வதும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

அதிகாலை 4 மணி முதல் அம்மனுக்கு பால், பன்னீர், திருமஞ்சனம், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், போன்ற 16 வகையான சிறப்பு அபிஷே கம் நடந்தது. கோடை விடுமுறையின் காரணமாக பக்தர்கள் கோவிலில் நேர்த்திகடன் செலுத்தி அம்மனுக்கு தீச்சட்டி, அங்க பிரதட்சணம், பால்குடம், ஆயிரம் கண் பானை, கரும்பு தொட்டி, மாவிளக்கு போன்ற நேர்த்திக்கடனை செலுத்தினர்,

தென் மாவட்டங்களான தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சங்கரன்கோவில், திருவேங்கடம், தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில் பட்டி போன்ற பல ஊர்க ளில் இருந்து திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

பக்தர்களுக்கு கழிப்பறை வசதி, குடிநீர் தொட்டி, மருத்துவ வசதி, ஆகிய வற்றை கோவில் நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பி னர்கள், கோவில் பணியா ளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News