உள்ளூர் செய்திகள்

முதலாமாண்டு மாணவர்கள் அறிமுக விழா

Published On 2022-11-20 08:45 GMT   |   Update On 2022-11-20 08:45 GMT
  • பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் அறிமுக விழா நடந்தது.
  • பி.எஸ்.ஆர். கல்விக்குழும தாளாளர் சோலைசாமி தலைமை தாங்கினார்.

சிவகாசி

சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்களுக்கு, மாணவர்கள் அறிமுக விழா கல்லூரி கலையரங்கில் நடந்தது. பி.எஸ்.ஆர். கல்விக்குழும தாளாளர் சோலைசாமி தலைமை தாங்கினார். கல்லூரியின் இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார்.

முதல்வர் செந்தில்குமார் மற்றும் டீன் மாரிச்சாமி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் டாக்டர்.தாமு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பொறியியல் கல்லூரியின் முக்கியத்துவம், அதன் பயன்பாடுகள் குறித்து பேசினார். கல்வி கற்பதில், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கு மற்றும் அவர்களின் நற்செயல்களை பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

தற்போதைய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், வாழ்க்கையில் சமூக வலைதளங்களின் தாக்கம் மற்றும் அதனால் நேரம், காலம் எவ்வாறு வீணடிக்கப்பபடுகிறது என்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறு சிறு கதைகள் மற்றும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கமளித்தார்.

மாணவர்கள் தங்கள் உடலையும் ஆரோக்கியமாக பேணிக்காப்பதன் மூலமாக, மனதையும், சிந்தனையையும் நல்வழியில் செலுத்தி, சமுதாயத்தில் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் எனக்கூறினார். உலகை வல்லரசாக்கும் திறமை, இன்றைய இளைஞர்களாக மாணவர்கள் கையில் தான் உள்ளது என கூறினார்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், முதலாமாண்டு துறைத்தலைவர் பேராசிரியர் ஸ்ரீராம் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர். இயற்பியல் துறை பேராசிரியர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News