உள்ளூர் செய்திகள்

வட்டார வளர்ச்சி அலுவலர்-பெண்ணுக்கு மிரட்டல்

Published On 2023-04-28 07:53 GMT   |   Update On 2023-04-28 07:53 GMT
  • வட்டார வளர்ச்சி அலுவலர், பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
  • நாங்கள் சொல்லும் நபர்களை தான் 100நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் நியமிக்க வேண்டும் என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளனர்.

விருதுநகர்

காரியாபட்டி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருபவர் சிவக்குமார். இவர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் இருந்தபோது காரியாபட்டி மீனாட்சிபுரத்தை சேர்ந்த குமராண்டி, அம்மாசி, தரகனேந்தலை சேர்ந்த தங்கவேல், மச்சக்காளை மற்றும் சிலர் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து நாங்கள் சொல்லும் நபர்களை தான் 100நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக நியமிக்க வேண்டும் என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளனர். இதுபற்றி சிவக்குமார் காரியாபட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூலக்கரையை சேர்ந்தவர் மாரீஸ்வரி(வயது42). இவருக்கும், உறவினர் கஞ்சம்மாள் என்பவருக்கும் சொத்து தகராறு உள்ளது. இந்த நிலையில் கஞ்சம்மாள் மகன் ராஜேஷ் கண்ணன், மாரீஸ்வரி நிலத்தில் டிராக்டரை நிறுத்தியிருந்ததாக கூறப்படுகிறது. இதனை மாரீஸ்வரி தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ராஜேஷ்கண்ணன், கார்த்தி, செல்வராஜ், பழனி ஆகியோர் மாரீஸ்வரியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுபற்றி மாரீஸ்வரி சூலக்கரை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்தவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News