உள்ளூர் செய்திகள்

இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-06-20 08:52 GMT   |   Update On 2023-06-20 09:49 GMT
  • இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர்

சிவகாசி கிழக்கு தெருவை சேர்ந்தவர் புவனேஸ்வரன். இவரது மனைவி மாரி(29). கணவர் அடிக்கடி மது குடித்து வந்ததால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதில் விரக்தியடைந்த மாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அருப்புக்கோட்டை சேர்ந்தவர் பெரிய கருப்பன்(வயது30), தொழி லாளி. இவர் அடிக்கடி மது குடித்து வந்ததார். மேலும் வீட்டில் இருந்த பணத்தையும் எடுத்து செலவு செய்ததாக தெரிகிறது. இதனை அவரது மனைவி இருவக்காள் கண்டித்துள்ளார்.இதனால் விரக்தி யடைந்த பெரிய கருப்பன் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அருப்புக்கோட்டை அருகே உள்ள புலியூரான் கிராமத்தை ேசர்ந்தவர் கந்தசாமி(வயது63). 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தபோது கந்தசாமி திடீரென மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மதுைர அரசு ஆஸ்பத்தரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கந்தசாமி இறந்தார். திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News