உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

Published On 2022-09-07 13:46 IST   |   Update On 2022-09-07 13:46:00 IST
  • விருதுநகர் அருகே மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
  • ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி தலைவர் கலந்து கொண்டு சைக்கிள்களை வழங்கினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் குருஞானசம்பந்தர் இந்து மேல்நிலைப்பள்ளி மற்றும் எம்.என்.ஆர்.டி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் கலந்து கொண்டு விலையில்லா சைக்கிள்களை வழங்கி னார். இதில் ராதாகிருஷ்ணன்பள்ளிச் செயலர் டி.ஏ.எஸ். கிருஷ்ணன், உறுப்பினர்கள் ஸ்ரீதரன், வெங்கட்ராமன், திருமலை, மணி, வரதராஜன், தலைமை ஆசிரியர் கண்ணன், தலைமை ஆசிரியை கல்யாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News