உள்ளூர் செய்திகள்

அடிக்கல் நாட்டு விழாவில் கலெக்டர் ஜெயசீலன், மாணிக்கம் தாகூர் எம்.பி., சீனிவாசன் எம்.எல்.ஏ., நகர் மன்ற தலைவர் மாதவன், ரெயில்வே கோட்ட மேலாளர் ஆனந்த் ஆகியோர் கலந்து ெகாண்டனர்.

விருதுநகர் ரெயில் நிலையத்தை மேம்படுத்துவதற்கான அடிக்கல் நாட்டு விழா

Published On 2023-08-07 14:19 IST   |   Update On 2023-08-07 14:19:00 IST
  • விருதுநகர் ரெயில் நிலையத்தை மேம்படுத்துவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
  • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

விருதுநகர்

இந்தியா முழுவதும் 508 ரெயில் நிலையங்கள் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளது. ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பில் நடக்கும் இந்த பணிகளை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் விருதுநகர் ரெயில் நிலையம் மேம்படுத்தப்பட உள்ளது.

அதன்படி விருதுநகர் ரெயில் நிலைய வளர்ச்சிப் பணிகள் முதல்கட்டமாக ரூ. 7.73 கோடியில் 2-ம் நுழைவு வாயில், 2-ம் நுழைவு வாயிலில் புதிய ரயில் நிலையக் கட்டடம், அணுகு சாலைகள், சுற்றுச்சுவர் புனரமைப்பு, வேலிச் சுவர்கள் புனர மைப்பு, ரெயில் நிலைய வளாகத்தை அழகு படுத்துதல், உட்புறச் சீரமைப்பு, பயணிகள் தொடர்பு கொள்ளும் பகுதி, மேம்படுத்தப்பட்ட குடிநீர்வசதி, அறிவிப்பு பலகைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கழிவுநீர் வடிகால் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு ரெயில் நிலைய அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா விருதுநகர் ரெயில் நிலையத்தில் நடந்தது. கலெக்டர் ஜெயசீலன், மாணிக்கம் தாகூர் எம்.பி., சீனிவாசன் எம்.எல்.ஏ. விருதுநகர் நகர் மன்ற தலைவர் மாதவன், மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்ட னர்.

இந்த விழா பாரம்பரிய பண்பாட்டை பிரதிபலிக்கும் கலைநிகழ்ச்சியோடு தொடங்கியது.நிகழ்ச்சியின் நிறைவில் பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு " இந்திய ெரயில்வேயின் ஆகச்சிறந்த முன்னேற்பாடுகள்" என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கட்டுரை,ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News