உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Published On 2023-02-18 07:27 GMT   |   Update On 2023-02-18 07:27 GMT
  • சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூரில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 21-ந்தேதி நடக்கிறது.
  • இதில் விவசாயிகள் கலந்து கொள்வதுடன் விவசாயம் சம்பந்தப்பட்ட பொதுவான கோரிக்கைகளை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் வருகிற 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெறும். இதில் விவசாயிகள் கலந்து கொள்வதுடன் விவசாயம் சம்பந்தப்பட்ட பொதுவான கோரிக்கைகளை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News